சனி, 10 ஆகஸ்ட், 2024

எப்சி/11.08.2024

பேனாவின் மூடியை திறக்கும்போதே

அந்த நிப்பு ஏங்குகிறது.

ஒரு அகாடெமி அவார்டுக்கு.

அது 

கொடுக்கப்படுகிறது.

அது 

வாங்கப்படுகிறது.

அது

பறிக்கப்படுகிறது.

அதுக்கு ஓட்டுப்பெட்டி

வாசகர்களா?

அரசியலா?

சிபாரிசுகளா?

எது வாயினும் சரி.

மூளியாய் பிறக்கும் எழுத்துக்களுக்கு

ஈயம் பூசப்படுகிறது.

படிக்கும் எறும்புகளும்

படைக்கும் எறும்புகளும்

ஊர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

திசையில்லாத 

திசையைத்தேடி.

ஊரில்லாத‌

ஊரைத்தேடி.


___________________________________________________

எப்சி

(திரு ஜெயதேவன் அவர்கள் திரு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வெண்முரசு போன்றவற்றிற்கு முக நூலில் "மௌவலில்" 11.08.24 அன்று ஒரு பதிவு இட்டிருந்தார்.அதற்கான பின்னூட்டம் இது.இங்கும் "எப்சி" என்பது அப்படியொரு எறும்பு தான்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக