புதன், 28 ஆகஸ்ட், 2024

வவ்வால்

 



சிலையிலிருந்து

கழன்று வந்து

கடவுள்

கருவறையை விட்டு

பிரகாரங்களின் இருட்டு 

மூலைகளுக்கு சென்றார்.

கோவில் கதவுகள்

மூடப்பட்டபின்

இப்படி காற்றாடப் போவது

வழக்கம்.

அப்படியே சென்றவர்

அங்கே அந்த மூலையில்

தலைகீழாய் தொங்கிக்

கொண்டிருந்த‌

வவ்வால்களைக்கண்டார்.

வவ்வால்களோடு வவ்வாலாய் மாறி

அவற்றொடு போய் நடுவில் 

தொங்கிக்கொண்டார்.

ஆம் 

தலைகீழாகத்தான்.

இப்போது தான்

தலைகீழாகிப்போன மனிதன்

எனக்கு நேராகத்

தெரிகிறான் என்று சொன்னார்.

அப்போதிருந்து

கருவறைக்குள் அவர் செல்லவில்லை.

இத்தனை நாளாய்

மந்திரங்களையும் தலைகீழாகத்தானே

சொல்லிக்கொண்டிருந்திருப்பான்

என்பதும் அவருக்கு புரிந்து போனது.

ஆத்திகராயிருந்தவர்

நாத்திகரானர்.

கருவறை இப்போ காலியாகவே

கிடக்கிறது.

 


______________________________________________________

எப்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக