வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

Erode Tamilanban kavithaikku en pinnoottam/23.08.24

பிழைதிருத்தம் வருவதற்குள்

பிணக்குவியல் லட்சங்களில்.

எங்கே லட்சியங்கள்

எனத்தேடுவதற்குள்

மனிதம் கிடந்தது

சவக்கிடங்கில்.

கவிதைக்குள் 

மூட்டியிருக்கிறீர்கள்

மா பெரும் தீ!

_______________________________

சொற்கீரன்

(ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிதைக்கு

ஒரு மின்னூட்டம்...02.09.2024)


________________________________________________________________________

அரும்பு மலரும்
நேரமிது யாரும் பார்க்க
வரலாம்! வாழ்த்துத்
தரலாம்! வண்டின்
குரலில் பாடத்
தெரிந்தால் வாயைத்
திறப்பதற்குத் தேவை
உரிமை! அதைஎழுதிக்
கேட்டுப் பெறலாம்.
ஓடைக்கு யிர்வந்தது
ஓடி வந்து பாருங்கள்
நீர்க்குழந்தை! நிலத்திலே
நெளியுததை வாழ்த்துங்கள்!
பார்த்துப் பார்த்துப்
படிக்கவே யார்படைத்த
நீர்மயாப் புக் கவியிது
நிலத்தாளில் மெல்லமெல்ல
நகருதே! நகருதே!!
.....................................
ஈரோசென்வியம்
நீர்க்குழந்தை-தலைப்பு
அதிகாலை 05-10.
............................
எல்லா உணர்ச்சிகளும்:
நீங்கள் மற்றும் 47 பேர்
21
3
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க
மிகவும் தொடர்புடையவை

E Paramasivan Paramasivan
எங்கள் உள்ளத்துள் உயர்ந்து நிற்கும்
ஈரோடு தமிழன்பன்
அவர்களே!
தமிழின்
சொல் அடுக்குகளின்
யாப்பு எனும்
சிகரம் ஏறி அல்லவா
இந்த
ஓடைப்பளிங்கின்
நெளியலைப் பாடுகிறீர்கள்.
அதன் உயரம் கேட்டோம்.
"உயரமா?...
கோடி கோடி.." என்று
மயங்கி விழுந்து கிடக்கிறது.
மூன்று சொல்லை மட்டும்
உதிர்த்து விட்டு....அது..
"தமிழ்"
---------------------------------------------
சொற்கீரன்.
படைப்பாளர்
Erode Tamilanban
E Paramasivan Paramasivan ஆகா!அருமை!





 



நிலத்தாளில் 

நீர்ம யாப்பு!

என்ன அருமையான 

எழுத்துக்கோர்ப்பு?

தமிழ்க்குழம்பு

எரிமலை சீறினாலும்

தண்ணிய குழம்பு இது.

உங்களின் இந்த "லாவா"

தமிழ் மொழிக்காதலர்களின்

ஊற்றுச்சுரப்பில்

தண்பூ தண்ணிழல்

நறும்பூ நறுநிழல் என்று

யாப்புச் சிலம்பின் 

பரல்களை தெறிக்க‌

விட்டுக்கொண்டிருக்கின்றனவே!

விளிம்புகள் உடைந்த கோட்டில்

நின்று

பெரு மகிழ்வு எய்திக்

கொண்டிருக்கிறோம்.

நன்றி!

_____________________________________

சொற்கீரன்.


ஈரோடு தமிழன்பன் கவிதைக்கு பின்னூட்டம்

____________________________________________‍‍‍

30.08.2024



யார் அம்பாளா பேசுறது

என்பது போல்

கேட்கிறது

திருகிய தலையுடன் நிற்கும்

விநாயகனைப்பார்த்து இது.

வெறும் சூட்சுமம்.

வெறும் அடையாளம் 

என்று சொல்லிவிடுவார்கள்.

ஆனால் 

காலத்தின் இந்த திருகு தாளமே

"பரிணாம‌த்தின்"

இந்த அரைவேக்காட்டுத்தனம்.

உங்கள் கவிதை

சொற்களை எங்கோ

அந்த "பெருவெடிப்பின்"

சந்தி முனைக்கு அல்லவா

இழுத்துச்செல்கிறது.

சிறந்த சொல் நுட்பம் 

உங்கள் எழுத்து!

_________________________________

சொற்கீரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக