வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

குமிழிகள்...

 குமிழிகள்...



சமுதாயத்தின் பெருமூச்சுகள்

இவை.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________


ஆடுவோம் பாடுவோம்

___________________________


மரபு என்பதும்

உண்மை அடியில் 

மறந்தே போய்விடுகிறது

என்னும் 

மறபு தானே.

சுதந்திரத்தின் உட்பொருள்

இன்னும் 

இமை விரிக்காத வேளையில்

எதை இங்கே சுதந்திரம் என்பது?

கை விலங்குகள் உடைந்ததாக‌

ஆடுவோம் பாடுவோம்

"வர்ண வர்ணமாய்"

இந்த கருத்துவிலங்குகளோடு.

________________________________

சொற்கீரன்.




தங்கலான்


மேக் அப் போட்டு

உடல் வருத்தி 

உயிர்ப்போடு நடித்தது

விக்ரம் தான்.

ஆனால் 

அவ்வளவும்

அரசியலுக்குள் 

ஒரு அரசியல் தேடும்

பா ரஞ்சித்திற்கான‌

"மிமிக்ரி"

________________________________

சொற்கீரன்


நாமெல்லாம்

கடவுள் பிசைந்த மண்ணின்

பாத்திரங்கள் தானே.

அவர் எந்த பாத்திரத்தில் 

இருக்கிறார் என்று

நூல் சுற்றிக்காட்டியது

சில சைத்தான்கள் தான்.

கடவுள் அதில் மட்டும் இருப்பதாய்

அவை கூப்பாடு போட்டன.

இதன் மூலம்

அந்த சாஸ்திரங்கள்

சொன்னது இது தான்.

கடவுள்கள் எல்லாம்

சைத்தான்களின் மந்திரத்தில் தான்

இருக்கின்றன.

பிரபஞ்சம் எல்லாமே

வர்ணமற்ற அவர்ணமாய்

வாலறிவு ஆன பின்னே

நூலின் அடையாளங்கள்

எதற்கு இங்கே?

எல்லா மண்ணும் நானே

என்று

அவர் காட்டிய பின்

எதற்கு இந்த கூச்சல்களில்

பூசனைகள்?


_________________________________________________-

சொற்கீரன்.






மௌவல் பின்னூட்டங்கள்


காதல்

_________________________

16.08.2024


காதல்

_________________________


கழுவில் ஏற்றப்பட்டவன்

காதல் என்று

நிப்பில் நீல ரத்தம்

சிந்துகின்றான்.

_________________

எப்சி

(பின்னூட்டம் இயலிசம் மௌவல் 16.08.24)




இதோ ஒரு காதல் கவிதை

________________________________



முகம் இங்கே

மூக்கு அங்கே

கண்கள் 

முட்டைகள் போல்

கழன்று அங்கே.

இன்னும் கை கால்கள்

எங்கெங்கோ

துண்டு துண்டாய்

அப்பாடா 

போதும் போதும்

அந்த கசாப்புக்கடைக்காரனிடம்

இரவல் வாங்கி

இந்தக்கவிதையை 

எழுதி முடிப்பதற்குள்.

_____________________________

எப்சி


(பின்னூட்டம் மௌவல் முகமது பாட்சா

16.08.2024)


______________________________________________

மௌவல் பின்னூட்டங்கள்/18.08.24



எப்போது 

அந்த காக்காவை 

காக்கா பிடிக்கப்பொகிறீர்கள்

அட விடுங்கள் இது

வெறும் விளையாட்டு தான் என்று!

________________________________

எப்சி


அந்த ஒலி ஒரு

மதுபானக்கிடங்கு.

அப்புறம் தான்

அது கொலுசு.

_______________________________

எப்சி


உங்கள் கருத்து

மிக மிக அருமை.

ஆனால்

இரண்டாயிரம் ஆண்டுகளின்

இருட்டில் 

அடம்பிடித்த மழையில்

அந்த "நான்கு வர்ணம்"

கெட்டிப்பட்டு விட்ட்தே.

____________________________________

எப்சி






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக