செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

பேய்

 



மரத்தில் இருட்டில் பேய்.

அந்த கும்மிருட்டு கூட‌

கருப்பாய் ரத்த வாந்தி.

குமுக்கென்று

அடிவயிறு பிசைந்து

இதயம் வெடிக்க‌

சதைக்கூழ்.

கடவுளே!

இந்த அச்சத்திலா 

உனக்கு சிம்மாசனம் வேண்டும்?

கரு பிசைந்து தந்ததும்

அறிவின் வாசனையற்ற‌

இந்த முரட்டு மொண்ணை 

மனத்தின் வெடிப்பிலா?

கடவுளே 

உன் கருச்சிதைவே

எங்கள் இந்த பேய் அச்சம்.


__________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக