செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

சிரித்துக்கொண்டிருக்கிறது.

 

கிழிகின்றன‌ தருணங்கள்.

காலத்தின் கந்தல்களில்

முகம் தெரிகிறது.

கோர நகங்கள் பிறாண்டிய 

ரத்த விளாறுகளில்

வசனங்கள்..அர்த்தங்கள்

பாஷ்யங்கள்..

கடவுளின் மீது

அவற்றிற்கு அவ்வளவு கோபமா?

சரி 

என்னை அடையாளம் தெரிகிறதா?

நீயும் தேவையில்லை.

உன் அடையாளங்களும் தேவையில்லை.

மந்திரங்களை அடுக்கிக்கொண்டே

போனார்கள்.

இருட்டு இன்னும்

கொக்கரித்து 

சிரித்துக்கொண்டிருக்கிறது.


____________________________________________

எப்சி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக