திங்கள், 26 ஆகஸ்ட், 2024

ஆடமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன...

 


ஆடமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன... (நற்றிணை 178)

_________________________________________________


சொற்கீரன். 27.08.2024  

நேரம் நள்ளிரவு தாண்டி 0145‍:37



நள்ளிரவு

தாண்டிய நேரம்.

கண்விழித்துப்

பேசிக்கொண்டிருந்தால்

பேய்களோடு தான் 

பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

அவையும் கூட‌

கொட்டாவி விட்டு விட்டு

போய் விட்டன.

இந்த மூளி இரவில்

கனத்த மௌனத்துக்கே உரிய‌

கண்ணுக்குத்தெரியாத‌

பருத்த உதடுகள்

அசைந்து அசைந்து

ஏதோ சொன்னதாய் ஒரு உணர்வு.

செவி மடல்களுக்குள்

எறும்புகள் ஊர்ந்த சன்னமான ஒசை

பனங்காட்டு ஓலை சள சளப்புகளை

அதிரவைத்தன.

பேய்கள் போன பிறகு 

அந்த தடத்தில்

எவை இவை?

ஊகம் செய்தேன்.

கடவுள்கள் குழுமி வந்துள்ளனர்.

கலவை மொழிகள்.

கதம்ப கருத்துகள்.

என்ன சொல்லியிருக்கும்.

படுக்கப்போகும் முன்

அது என்ன என்று தெரிந்தே ஆகவேண்டும்

ஒரே மண்டைக்குடைச்சல்.

எனது கணினியின் லேடஸ்ட் ஏ ஐ ஆப்பில்

அதுவும் குவாண்டம் கம்பியூட்டிங்கில்

கிளிக்கினேன்.

அதுவும் பல பில்லியன் ஒளியாண்டுகள்

பாய்ந்து சென்று

என்டாங்கில்மெண்டில்

கவ்விப்பிடித்து தரவு தந்து விடுமாம்.

தந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக