வியாழன், 1 ஆகஸ்ட், 2024

என்ன எழுதுகிறாய்?


 
பொது உடன் பகிர்ந்தது

என்ன எழுதுகிறாய்?
எழுத்துக்கள்
கேட்டுக்கொண்டிருந்தன.
விழுந்த எழுத்துக்கள் மேல்
விழும் எழுத்துக்கள்
மிதித்துக்கொண்டே
கேட்டன.
மொத்தக்காயமும்
காகிதத்துக்குத் தான்.
நானா எழுதுகிறேன்?
பேனா மறுதலித்தது.
இதெல்லாம்
சமுதாயத்தின் கண்ணீர்.
சமுதாயத்தின் மேல்
விழும் கண்ணீர்.
சித்தாந்தங்கள் எல்லாம்
சிலுவையில்.
ஆலய மணி ஓசைகள்..
மண்டை பிளக்கின்றன.
தாங்கமுடியவில்லை.
கோவில்களுக்குள்ளேயாவா
கடவுள்களின் மார்ச்சுவரி?
-----------------------------------------------
செங்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக