வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

எல்லோரும் வாழ வேண்டும்

 எல்லோரும் வாழ வேண்டும்

___________________________________________

ருத்ரா.


எல்லோரும் நல்லவரே

இது ஏன்

கடவுள்களுக்கு புரியவில்லை.

தங்கள் தங்களுக்கென‌

வசனங்கள்

மொழிகள் 

மந்திரங்கள்.

மனிதர்களை பிளவு ப்டுத்தும்போதே

கடவுள்கள் 

துண்டு துண்டு ஆகி விடுகிறார்கள்.

அவர்களின் 

அன்பு அமைதி நேயம் 

எல்லாம் அர்த்தமற்ற‌

சடலங்கள் ஆகி விடுகின்றனவே.

மனிதனின் அறிவு 

விஞ்ஞானமாய்

இந்த சடலங்களை உயிர்ப்பிக்க‌

தன் பரிமாணங்களைக் கடந்த‌

ஒரு பரிணாமத்துக்குத் தான் தாவுகிறது.

அடி வெறியாய்

மனிதர்களை வெறும் குப்பையாக்கி

வியாபாரம் செய்யும் 

அரக்கத்தனம்

இங்கு எல்லாவற்றையும்

அடித்து சாப்பிடக்கிளம்பியிருப்பதை

தடுப்பது யார்?

எல்லோரும் நல்லவரே

என்ற பஜனைகள் மட்டும் போதாது.

எல்லோரும் வாழ வேண்டும்

என்றொரு வாள் கூர்மைப்படவேண்டும்.

கண்ணில் தெரியாத‌

அந்த அரக்கத்தனம் குத்திக்கிழிக்கப்பட‌

ஆம்

எல்லோரும் 

ஆவேசமாய் வாழவேண்டும்.


______________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக