செவ்வாய், 4 ஜூன், 2024

தீக்குச்சிகள்

 



நீங்கள் சொல்கிற சதவீதங்களுக்கும் இந்த 40‍_40 வெற்றிக்கும் தொடர்பில்லை தான்.நா த க மேடையில் பண்ணுகிற உறுமல் செறுமல் அழிச்சாட்டியங்களும் ஈழத்தமிழர் படுகொலையின் அடி நெருப்பு சினங்களும்

பொதுவாகவே தமிழர்கள் இடையில் கிடக்கின்ற பக்திப்போதைகளும் அதை தெளிவிக்கும் கடமையில் உள்ள 

திராவிடத்தமிழ் அல்லது தமிழ்த்திராவிட பற்றாளர்கள் தொய்ந்து கிடப்பதும் சாதியின் கொடுங்கோன்மை 

பிராமணியத்தால் இயக்கப்படுவதை விடவும் இந்த திராவிட இடைச்சாதி வெறியாளர்களிடையே தான் பற்றி தீ மூட்டிக்கொண்டிருப்பதுமான "தமிழன் வீழ்ச்சி"நிலைக்கு ஓவ்வொரு தமிழனும் பொறுப்பேற்க வேண்டும்.தீயை

விட அதைப்பற்ற வைக்கும் தீக்குச்சிகள் பா ஜ க வினரிடையே பலப் பல தில்லு முல்லு கலவரத்தந்திரங்களாய் 

விரவிக்கிடப்பது அப்பாவித்தனமாய் ஒரு "தி மு க " எதிர்ப்புத்தனையை மூளவிட்டிருக்கிறதும் என்பதும் உண்மையே.கூட்டணி ஓற்றுமை எனும் பலமான ஒரு கொள்கைப்பாசத்தை ஸ்டாலின் தமிழ் நாட்டில் உருவாக்கி

இருக்கிறார் என்பதும் உண்மையே.கடந்த கால "ம ந கூ" கூத்துகளும் காங்கிரஸின் துக்கடாத்தனங்களும்

இன்னும் அபாயம் தான்.இவ்வளவுக்கும் மேலாக தி மு க வின் "பெரியண்ணன்"தங்களும் தலைக்காட்டப்பட‌

அனுமதிக்கக்கூடாது.இப்போது நான் குறிப்பிட்ட அரசியல் கூறுகள் ஆய்வு செய்யப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பா ஜ கவின் பணபலம் அதிகாரபலம் மற்றும் குறுக்கு மூளை சித்தாந்தங்கள் எல்லாமே இன்னும் அபாயமாகத்தான் இருக்கிறது.இந்த தந்திர நரிகள் தான் அதிமுக வாக்குகளை

வாயில் கவ்விக்கொண்டிருக்கிறது.உண்மையில் திமுகவும் அதிமுகவும் உதிரித்திராவிடங்கள் பேசுவதை 

நிறுத்திக்கொண்டு ஒன்றுபட்டு மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய கட்டுமானத்தை பலப்படுத்தவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக