திங்கள், 3 ஜூன், 2024

பின்னூட்டம்.

 திரு சேகர் கிருஷ்ணசாமி அவர்களின் ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இது

_________________________________________________________________

03.06.2024


முதல் காதல் என்றும் அப்புறம் இரண்டாவது மூன்றாவது என்றும் எண்ணிகைகளால் ஆபாசப்படுவது அல்ல காதல்.சும்மா கிடக்கும் மனசு அவ்வப்போது குமிழி விட்டுக்கொண்டிருப்பது காதலைத்தான்.மற்ற நினைவுகளும் வந்து வந்து மோதுவது உண்டு.அவை வெறும் சள சளப்புகள்.இந்த சத்தங்களையும் கூட்டிப்பெருக்கி அந்த துடைப்பத்துக்கும் பட்டுக்குஞ்சம் கட்டி மொத்தையாக ஒரு ஆயிரம் பக்கங்கள் வரை நாவல் எழுதுவார்கள்.எப்போதும் பிரம்மம் பிரம்மம் என்று ஓதிக்கொண்டிருப்பதை கேட்பதில் அந்த பிரம்மன் கூட களைத்து கந்தல் ஆகிவிடுவான்.ஒரு பட்டாம்பூச்சி ஏதோ நினைப்பில் சிறகுகளை உரசிக்கொண்டிருக்கிறது என்று எழுதினால் போதும் "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி.."என்று பிரம்மமே பாடல் எழுதத்தூண்டிவிடும்.

உங்கள் நினைவுகளின்  சொற்சித்திரம் அடி ஆழத்தில் எங்கோ பூத்திருக்கிற நெருப்பு மலரை வருடுகிறது.

சூடாகிப்போயின நினைவுகள்.

___________________________________________________________________

கல்லாடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக