ஞாயிறு, 16 ஜூன், 2024

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி

 



தந்தை மகற்கு ஆற்றும் நன்றியாய்

கொடுத்தது என்னென்ன?

துடிக்கும் வரை இதயம் 

நினைக்கும் வரை நெஞ்சம்.

இருக்கும் வரை அன்பு.

இற்று விழுந்த பின்னும்

அதன் மாணிக்கச்சுவடு.

எதற்கு அவர் காட்டவேண்டும் நன்றி?

தக்கார் தகவிலர் என்பது அவர் தம்

எச்சத்தால் காணப்படும்.

தன் மகன் என்ன‌

வெறும் காக்காய் எச்சமா?

தன்னை இந்த மண்ணிற்கு தக்கவன்

என்று காட்டும் 

தன் பொன்னிழல் தானே 

தன் மகன்

எனும் இந்த பொன்மனச்செல்வன்.

நன்றி சொன்னான் தந்தை

தன் மகனுக்கு.

தந்தையர் தினம் மட்டும் அல்ல இது.

தந்தையை உயர்த்திய மகனின்

தினமும் இது தான்.


___________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக