வியாழன், 20 ஜூன், 2024

தவளைக்கல்




தவளைக்கல் எறிந்தது

போல் இருந்தது.

வட்டம் வட்டமாய் 

பளிங்குப் பரப்பில்

கவிதைகள் தோற்றுக்கிடந்தன.

அந்த அலைகள் யாவும்

விழிகள்...விழிகள்..

அவ்வளவு தூரத்துக்குப்போய்

மூழ்கிய போது

அந்த ஓட்டாஞ்சல்லி

கால்களை அகல விரித்து

தாவும் தவளையாய்

காட்சிக்குள் கரைந்தே போனது

மூச்சு இரைக்கும் துடிப்பு.

விழுங்கிய தருணங்களே

பிரசவித்து உயிர்த்தன.

மலைகளின் பின்னிருந்து

உதயமானது போல்...

எல்லாம் புதிது.

பெண்ணே!

உன் ஓரப்பார்வைக்குள்

இத்தனை ஏவுககணைக்களைக் 

கொண்டா அந்த‌

தவளைக்கல் எறிந்தாய்.

__________________________________________

அஞ்சிறைத்தும்பி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக