ஞாயிறு, 31 மார்ச், 2019

அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
==================================================ருத்ரா


"அடேய்..எங்கேடா கெளம்பிட்டே.."

"தேர்தல் நேரம்..அதான் கட்சிக்கூட்டங்களை பாக்கப்போறேன்"

"சரி தாண்டா. கட்சிக்கூட்டம்லாம் போதுண்டா.ரெண்டும் ஒரே குட்டையிலே ஊறுன மட்டைக தானே."

"போதும்ணே.. ஆ  ஊண்ணா இதத்தான் சொல்றீங்க..இதக்கேட்டு கேட்டு காது புளிச்சுப்போச்சு."

"ஏண்டா சலிச்சுக்கிறே?"

"சரிண்ணே..ரெண்டு மட்டைய விடுங்க..அந்த மூணாவது மட்டையும்
அதே குட்டையிலே ஊறிகிட்டு தானே கெடக்கு..."

"எதுடா மூணாவது மட்டை?"

"ஒவ்வொரு வாட்டியும் சலிக்காம கை வலிக்காம கைய நீட்டி நீட்டி
ஓட்டுப்போட்டுக் கிட்டே இருக்கோமே..நாம தான் அந்த மூணாவது மட்டை.."

"டேய்..டேய் ஞானப்பழம் ஒனக்கு ஞானம் நெறையவே முத்திப்போச்சுடா. தோ வர்ரேன்."

இவர் கையை ஒங்கி அடிக்கபோகிறார் .அவர் ஓடிப்போய் விடுகிறார்.

====================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக