வெள்ளி, 22 மார்ச், 2019

தேர்தல் ஆற்றுப்படை.

தேர்தல் ஆற்றுப்படை.


மோடி அவர்களே!
======================================ருத்ரா

எட்டுத்திக்கும்
விழிகளை சுழற்றுகிறீர்கள்.
பழைய அலைகளைத்தேடி.
நாடாளும் பிரதமருக்கு
கடைக்கோடியில் இருக்கும்
பாரத புத்திரர்களும்
இந்த ஜனநாயக புத்திரர்கள் தானே.
ஆனால்
வாரணாசியில் போய் நின்றுகொண்டு
பம்பை அடிக்கும் சாதுக்களையும்
கங்கைவெள்ளத்தில்
வால் சுழற்றி ஓடும் முதலைகளையும்
அரைகுறை வெந்த பிணங்களையும்
தர்ப்பைப்புல்கூளங்களையும்
சாக்கடைகளையும்
பல ஆயிரம் கோடிகளை முழுங்கிய பிறகும்
இன்னும் தாங்கமுடியாமல்
வீசிக்கொண்டிருக்கும் முடைநாற்றத்தையும்
மட்டுமே
பார்த்து பார்த்து
பழைய அலைகளை
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
அந்த அலைகள்
பாம்பு கழற்றிப்போட்ட சட்டையாய்
கந்தலாய்
மக்களின் காலடிப்புழுதியில் கிடப்பதை
கண்டுவிட்டீர்களா? இல்லையா?
கோடி கோடியாய் விலை கொடுத்து
வாங்கிய உங்கள்
பொருளாதாரக்கூட்டாளிகள்
ட்விட்டர்களையும் இன்ஸ்டாகிராம்களையும்
வைத்து
உங்கள் பலூனுக்கு
காற்றடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் கைவைத்து
உங்கள் நெஞ்சைத் தொட்டு
சொல்லுங்கள்.
இந்த மக்களுக்கு
மதத்தின் கொம்பும் கூர் நகமும்
கோரைப்பல்லும்
மட்டும் வந்து விட்டால் போதுமா?

===============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக