புதன், 31 ஆகஸ்ட், 2022

"குறையொன்றும் இல்லை.."

 "குறையொன்றும் இல்லை.."

புல்லாங்குழலில்

வீணையில்

வாய்ப்பாட்டில்

கீ போர்டுகளில் 

இன்னும் 

கிராமத்துக்கொட்டங்கச்சியில் கூட‌

கண்ணா!

அப்படித்தான் பாடுகிறோம்.

நீ 

எங்களுக்கு 

எந்த குறையும் வைக்கவில்லை.

ஆமாம்..

எங்களைப்பற்றி

நாங்கள் மனிதர்கள்

என்று

அறிந்து கொள்ளும்

வாய்ப்பையே 

நீ இன்னும் தரவில்லை.

ஆடுகளாக மாடுகளாக‌

எங்களை மேய்த்துக்கொண்டிருக்கிறாய்.

பரிணாமம் எனும்

கீதையைப்பற்றி அறியாமல்

மனிதனின் உள்விசையை

உணர்ந்து கொள்ளாமல்

உன் விஸ்வரூபத்தைக்கண்டு மட்டும்

பயந்து கொண்டு

பாடிக்கொண்டிருக்கிறோம்..

"குறையொன்றும் இல்லை..கண்ணா.."


_________________________________________________

ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக