ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

கூடுகள் நோக்கி

 அது என்ன‌

கவிஞன் என்றால்

மட்டும் 

வெறும் மண் சட்டியில் 

சமைக்கமுடிவதில்லை.

அவன் எழுத்துக்கள்

வெந்து விட்டனவா இல்லையா

என்று பார்ப்பதற்கு கூட‌

எங்கோ கட்டித்தொங்க விடப்பட்ட‌

தூக்கணாங்குருவிகளின்

வைரப்பிசிறுகளால் நெய்த‌

கூடுகள் நோக்கி 

பறக்க வேண்டியிருக்கிறது.

வானம் முழுதும் அந்த சோற்று மணம்

சூரியனின் 

நாக்கிலும் நீர் ஊற வைக்கிறது.


________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக