வியாழன், 1 செப்டம்பர், 2022

கேட்கட்டும்

 கேட்கட்டும்

________________________________________‍

ருத்ரா



மரம் நிறைய் இலைகள்.

இலை நிறைய சூரியத்தழுவல்.

பச்சையம் என்ற‌

உயிர்ப்போர்வை தரும்

பச்சை நிழலுக்குள்

பட்டாம்பூச்சிகளின் 

பல்கலைக்கழகங்கள்.

காற்றின் சிலுசிலுப்பு

ஏதோ ஏக்கங்களைக் கொண்டு

நெய்யத்தொடங்கின.

கண்களுக்குள் அகப்படாமல்

கைப்பிடிக்குள்

உள்ளங்கை ரேகைகள்

அனக்கொண்டாக்கள் நெளியும்

அமேசான் ஆறுகளாய்

அனல் பரப்பும் நினைவுகளை

அங்கே நெஞ்சமே

லாவாவைக்கொட்டி

படுக்கை விரித்தன.

ஏன் இந்த அழுத்தங்கள்?

கடவுள் எனும் மயிற்பீலி கொண்டு

வருட நினைத்தால்

அங்கே நம்பிக்கையும் மனத்தெளிவும்

தொலந்து கிடக்கும்

முரட்டு வசனங்களே

மந்திரங்களைக்கொண்டு

வதம் செய்கின்றன.

செம்பவளங்கள் போல்

அந்த ஆலமரத்துப்பழங்கள்

நீலவானத்தை உரசி உரசி

ஒரு செவ்வானத்தேனை பிழிந்து

இனிமையால் என்னை

ஆட்கொள்ளுகின்றன.

இதை மட்டுமே என் இறைவம்

என்று 

நான் சூட்டிக்கொள்கிறேன்.

இப்போது அந்த 

கடவுள் கேட்கட்டும்

வரம் தருவேன்.


_____________________________________________________









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக