சனி, 27 ஆகஸ்ட், 2022

கல்யாண்ஜியின் நாய்க்குட்டிகள்

 கல்யாண்ஜியின் நாய்க்குட்டிகள்

_________________________________‍‍____


"காலை வேம்பின் கசப்பு நிழல்"

இந்த ஒரு வரியே கவிதை ஓவியம் தான்.

இல்லாத நாயோடு

இருக்கும் நாய்கள் கட்டிப்புரண்டு

விளையாடுவதாக...

என்ன கூரிய..ஆழ்ந்த சிந்தனை!

ஆனித்தேரோட்டத்தில்

ஆயிரம் ஆயிரம் மக்கள்

பக்தியில் கட்டிப்புரண்டு 

களிப்பது நமக்கு காதலாகி கசிந்து

கண்ணீர் மல்குவது தெரிகிறது.

அந்த இல்லாத இன்னொருவனுக்கு

ஆயிரம் டன் எடையை வைத்து

இழுத்து வேர்த்து

மயிலிறகுச்சாமரத்தில் காற்று வாங்கி....

முற்றுப்புள்ளி அவசியமில்லாத ஒன்று.


________________________________________

ருத்ரா






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக