திங்கள், 27 ஜனவரி, 2025

மயிற்பீலிகள்

 


மயிற்பீலிகள்

வருடி வருடி

களைத்துப்போயின.

கனவுச் சதை மிச்சங்களில்

தூக்கத்தின் கடமுட‌

இரைச்சல்களின்

எலும்புகள்

துருத்திக்கிடந்தன.

இன்றாவது சொப்பன வலைக்குள்

விழுந்து

துடித்துக்கொண்டு கிடக்கலாம்

என்றவளுக்கு

பஞ்சணைப்பாறாங்கல்லே

உரசி உரசி

அதோ அந்த தீப்பொறிகளீல்

இப்போது தான் 

பற்ற வைக்க ஆரம்பித்திருக்கிறது.

__________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக