வெள்ளி, 24 ஜனவரி, 2025

அகழ்நானூறு 92.

 

அகழ்நானூறு 92

_____________________________________

சொற்கீரன்



நெருப்பு ஈன்ற சூட்டின் செஞ்சுவை

பனிநீர் நுங்கில் சுவைத்தாள் அன்ன‌

பிரிதுயர் பிழிதரு ஒண்தேன் பெய்யல்

நெஞ்சில் மூழ்கி நெட்டுயிர் முட்டுநள்

நெடுநல் வாடையின் முளிதயிர்க் கடைகோல்

திரிதரு விசையில் நோன்றாள் என்னே.

பொருள்வயின் தேட்டைக் கேகுவன் மன்

முட்சுரம் கற்சுரம் பொரிய வீழ்த்தும்.

அத்தா நத்தம் அண்ணிப்பேன் என‌

ஆறுபடுபு அழல் ஊடு புகுந்தன்ன‌

அணிவெண் வெயிலின் அம்புகுழீஇய‌ 

மழையினும் குளிக்கும் களிக்கும்

அவள் இறைமுன் ஆர்கலி ஒலிகள்

ஓர்க்கும் வேர்க்கும் ஒல்லாதவாறு.

_____________________________________________


பொருள் தேடி செல்லும் காதலனின் தேட்டையும்

காதலியின் பிரி துயர்க் கொடுமையும் பற்றிய‌

எனது "சங்க நடை செய்யுட் கவிதை இது.


சொற்கீரன்

_________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக