"சிருஷ்டியும் திருஷ்டியும்..."
________________________________________
கடவுள்
மனிதனைப் படைத்து விட்டு
பார்த்தான்.
ஆகா!எவ்வளவு அழகு நீ!
கல்லடி படலாம்
கண்ணடி படலாமா நீ
என்று ஒரு "திருஷ்டிப் பொட்டாக"
"கோவிலை"ப்படைத்தான்.
. . . . . . . . .
. . . . . . . . . . . .
மதம் ஏன்
இவ்வளவு அசிங்கமாகப் போனது என்று
இப்போதாவது
உனக்கு புரிந்ததா?
அவன் கேட்டது
இவனுக்குப் புரியவில்லை.
இவன் மந்திரங்களும்
அவனுக்கு
இன்னும் புரியவே இல்லை.
_________________________________
சொற்கீரன்.
APPENDIX
புரியலையா?
நன்னா சொல்றேன்
கேட்டுக்கோ..... .
மந்திரத்தை மொழி பெயர்த்தார்.
இவ்வளவு கோயிலைப்படைத்து
இவாளுக்கு "அறிவையும்னா"
கொடுத்திட்டே..
அதான் இங்கே எல்லாம்
காத்தாடுது
ஒண்ணும் பத்தலே..
_________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக