செவ்வாய், 5 டிசம்பர், 2017

காஃபிக்கோப்பை ஆறுகிறது

காஃபிக்கோப்பை ஆறுகிறது
=======================================ருத்ரா இ.பரமசிவன்


டேபிளில்
காஃபிக்கோப்பை ஆறுகிறது.
பத்திரிகை பக்கங்கள் படபடக்கின்றன.
அவன் அவசரம் அவசரமாய்
பத்திரிகைப்பக்கங்களை தேடுகிறான்.
ஆம்.
அவன் படத்துடன்
கட்டத்துள் செய்தியுடன்
மூக்குக்கண்ணாடியையும்
பிதுங்கி வழிய
அவனுக்கு வந்த
"கண்ணீர் அஞ்சலியைப் "
பார்த்துக்கொண்டிருந்தான்.
இது போதும்.
அவன் படுக்கையில் போய்
விறைத்துக்கொண்டான்.
சூரியன் ஒளியை துப்பிக்கொண்டு
எழுந்திருந்தான்.
அந்த வீட்டின் அந்த படுக்கை அறையிலிருந்து
கூக்குரல்கள் ஓலங்கள்
வெளிக்கிளம்பின!


===================================================
(மறு பதிவு)

SDC12989.JPG

2 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதை நன்று. பாராட்டுக்கள்.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்புள்ள திரு வெங்கட்நாகராஜ் அவர்களே

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

அன்புடன்
ருத்ரா

கருத்துரையிடுக