செவ்வாய், 12 டிசம்பர், 2017

கடவுளைத்தேடு!



கடவுளைத்தேடு!
===================================ருத்ரா

ஒரு ஞானியிடம்
கடவுள் இருக்கிறாரா
என்று ஒருவன்கேட்டான்.
அவர்
ஒரு வைக்கோற்படப்பை
காட்டி
இதில் தான் இருக்கிறார்
தேடு என்கிறார்.
அவன் ஒவ்வொரு வைக்கோலாக
தேடுகிறான்.
எல்லாவற்றையும் தேடி முடித்துவிட்டான்.
பார்த்துவிட்டாயா
என்று கேட்கிறார்
இல்லை
என்கிறான்.
எதைத்தேடினாய்?
எதைத்தேடினேன் என்பதே
மறந்து விட்டதே
என்கிறான்.
இப்போது உனக்கு
என்ன தெரிய வேண்டும்?
எனக்கு எதுவுமே தெரிய வேண்டியதில்லை
என்பதே
நான் இப்போது தெரிந்து கொண்டது.
ஞானி
இப்போது அவன் காலில் விழுந்தார்,
"குருவே
எனக்கு அந்த ஞானத்தை
போதியுங்கள்"
என்றார்.

=========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக