சனி, 9 டிசம்பர், 2017

மூவர் உலா

மூவர் உலா
=================================ருத்ரா

ஒட்டக்கூத்தர்
எனும் புலவர் அன்று
எழுதினார்
மூவர் உலா.

இன்று
ஓட்டுக்கூத்தர்கள்
உங்களை
வரவேற்று
எழுதுகிறார்கள்.

கமல்
ரஜனி
விஜய்
அவர்களே!

என்ன செய்யப்போகிறீர்கள்
இந்த தமிழ் நாட்டை!
உங்கள் கையில்
செங்கோல் திணிக்க‌
இந்த‌
பால் குட செட்டிங்
படைகள் தயார்.

உங்கள் குத்தாட்டங்கள்
போதும் என்று
இவை உங்களுக்கு
வாக்குச்சீட்டுகளால்
குடமுழுக்கு செய்து
உங்களை
புனிதப்படுத்தத் தயார்.

உங்கள்
பஞ்ச் டையலாக்குகளே
அவர்களின்
வேத வேதாந்தங்கள்.

லாபம் குவித்து
மனித வள‌ங்கள்
உறிஞ்சப்படும்
கள்ளத்தனம் அலையடிக்கும்..
இந்த பொருளாதாரத்தின்
கருங்கடலை
உழைப்பவர்களின்..
இந்த உலகைப்படைப்பவர்களின்..
வியர்வை ஒன்றே
தூய்மைப்படுத்தும்
என்ற உண்மை
தன் இமைகளை
உயர்த்தும் வரை
சினிமாவுக்குள் சினிமாவாக‌
சமுதாயத்தின் இந்த‌
காக்காய் வலிப்புகளே
வலம் வரட்டும்.

தூரத்து "விடியல்கள்"
இங்கே வந்து சுட்டெரிக்கவா
போகிறது
என்று
இந்த மத்தாப்புகள்
ஈயம் பித்தாளை வெளிச்சங்களை
இளித்துக்கொண்டே தான் இருக்கின்றன.

மனித வரலாற்றை
மீண்டும் மண்ணுக்குள்
புதைக்க வரும்
அந்த சாதி மத அரக்கர்களை
வதம் செய்ய‌
நாம் ஏதாவது
ஒன்றை செய்தாக வேண்டும்

இந்த மத்தாப்பு
பூதங்களைக் கொண்டு
அந்த இருட்டுவேதாளங்களை
அடித்து விரட்டும்
"அறம்" ஒன்றே
நம் வழி!
ஆம் நிச்சயம்
அது
நம் தனி வழி தான்.

============================================

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமையாக சாடி இருக்கிறீர்கள் ஐயா.
வீட்டில் வளர்க்கும் விட்டில் பூச்சிகளை...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றாய்ச் சொன்னீர்கள் "விட்டில் பூச்சிகள்" என்று திரு.கில்லர்ஜி அவர்களே.
நன்றி.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக