செவ்வாய், 26 டிசம்பர், 2017

மகிழ்ச்சி நிறைந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி நிறைந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்
================================================ருத்ரா

தினம் தினம் தான்
சூரியன் உதிக்கிறது.
ஆனால்
அன்றொரு நாள்
உதித்த சூரியனுக்கு
வியப்பு தாங்கவில்லை.
மாட்டுக்கொட்டிலில்
பனித்துளிகள்
பூச்சொரிய பிறந்த
அந்த பிஞ்சு உதிர்த்த
"குவா குவா"வில்
இது தான் எல்லோருக்கும்
கேட்டது.
"கடவுள் ஒரு பூச்சாண்டி அல்ல.
தண்டனை தருவதற்காகவே
உங்களுக்கு
அச்சம் தருவதற்கும்
அவர் அவதரிக்க வில்லை.
பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு.
உன் மனச்சாட்சியையே
கடவுளாக விசுவாசி.
அப்புறம்
உலகம் முழுதுமே
அன்பு புன்னைகைகளின்
மொத்தமான ஒரு பூச்செண்டு தான்."
ஆம்
அந்த பூச்செண்டே
இதோ இனிய விடியலாய்
விண் பிளந்து
மண் அளந்து
மலர்ச்சி காட்டுகின்றது.!

==========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக