செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஓங்கி உலகளந்து......

ஓங்கி உலகளந்து......
======================================ருத்ரா 

ஓங்கி உலகளந்து
மூன்றாவது அடியை
மாவலியின் தலையில் வைத்து
அமிழ்த்திய‌
நெடுமாறனை 
உள்ளே உணர்ந்து மகிழ்ந்து கலந்து
பாடியிருக்கிறார் 
அருள் மிகு ஆண்டாள்.
அவரது இனிய தமிழ்
எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும்
எழுத்துப்போதை தான்.
அதில் ஊறிக்கிடக்கும்
பக்திப்போதையை எல்லாம்
தெளியவிட்டு சிந்தித்தால்
நமக்கு ஒரு கேள்வி பிறக்கிறது.
மாவலி ஒரு சிறந்த மக்கள் ஆட்சியாளன் என்று
மலையாளத்தில் இன்றும்
மலர்க்கோலங்கள் இட்டு
அவனைக்கொண்டாடுகிறார்கள்.
இறைவன்
அடே மாவலி
நீ என்னை (விஷ்ணுவை) விட்டு
சிவனை ஏன் போற்றுகிறாய்
என்று நேரிடையாக கேட்டிருக்கலாம்.
அதை விட்டு
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும்
அவன் பலவீனத்தைப்பயன்படுத்தி
இரண்டடி நிலம் வரைக்கும்
குள்ள அந்தணர் வேடத்தில்
தாழங்குடை பிடித்து நின்றவர்
மூன்றாவது அடியில் விஸ்வரூபம் எடுத்து
அவனை அமிழ்த்திக்கொன்றதில்
என்ன நியாயம்?
எனவே
ஓங்கி உலகளந்து நின்றது
மாவலி தான்.
புராணங்களின் சப்பைக்காரணங்கள் எல்லாம்
தள்ளுபடி செய்யப்பட வேண்டியவை!
இதுவும் கூட‌
ஒரு மார்கழி சிந்தனை தான்.

====================================================
19.12.2015.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக