திங்கள், 11 டிசம்பர், 2017

நிவின்பாலி

நிவின்பாலி
========================================ருத்ரா

மலையாள சிலிர்ப்போடு
தமிழ்ப்படத்துள்
ஒரு புதிய நல் வரவு.
"ரிச்சி" படத்தில்
தென்பாண்டி
அறுவாள்வீச்சு வாசனை
அதிகமாக அடிக்கவில்லையென்றாலும்
அந்த யதார்த்தமான‌
கோபமும் பழிவாங்கலும்
ஒரு புதிய பரிமாணத்தை
பதியமிட்டுள்ளது.
வில்லன் என்று வெறுமே
தள்ளிவிடமுடியாத அளவுக்கு
உள்ளுக்குள்ளிருந்து
நிமிண்டிப்பார்க்கும்
ஒரு கதாநாயகத்தனமும்
தெரிகிறது.
மலையாளப்படங்களில்
கதை வேறு
நடிப்பு வேறு
என்று துருத்திக்கொண்டிருக்காது.
தமிழ்ப்படங்களில்
வேறு வேறாய் அலங்காரம்
செய்யப்பட்டிருக்கும்
ஆனால் மலையாள மொழி
மக்களோடு சவ்வூடு பரவல் மூலம் நிரவி
மண் வாசனையை
அங்குள்ள மனங்களின்
வாசனையாக்கி விடும்.
அன்றாட‌
நடவடிக்கைகளை
யாரோ ஒரு புகழ்பெற்ற‌
எழுத்தாளர்
காகிதத்தில் எழுதி உலவ விட்டது போல்
நிகழ்வுகள் முறுக்கு ஏறி நிற்கும்.
அதனால்
நிவின்பாலி
நிஜமாய் ரவுடித்தனம் பண்ணும்
அடாவடியை அற்புதமாய் காட்டுகிறார்.
கூச்சல் இல்லை.இரைச்சல் இல்லை.
இன்னொரு பாபி சின்ஹா
என்று சொல்லிவிடமுடியாத வகையில்
ஒரு புது வடிவம் காட்டுகிறார்.
சிறுவயதில்
அபாண்ட பழி சுமத்தப்பட்டு...எனும்
சிறு பொறி
இவ்வளவு கொந்தளிப்புகள் ததும்பும்
பாத்திரமாக உலவுகிறது
என்பதை
தனித்த முத்திரையோடு
காட்டுகிறார் நிவின்பாலி.
வழக்கமாய்
வில்லனாய் கர்ஜிக்கும்
பிரகாஷ்ராஜ்
இங்கு தன் பளிங்கு துளிர்ப்புகளான‌
கண்ணீரில்
தன் மகன் வாழ்க்கை சிதைவது அறிந்து
சகிக்காமல் சகிப்பதை
நன்றாக காட்டுகிறார்.
ஃபாதரின் வெள்ளையுடைக்குள்
துடிக்கும் ரத்தம்
ஊமைச்சிவப்பாய்
சோகம் இழையோடச்செய்கிறது.
இன்னும் எத்தனையோ காட்சிகள்
மற்றும்
நடிக நடிகைகளின்
அளவாக செதுக்கப்பட்ட நடிப்பின்
அற்புத தெறிப்புகள்
நிச்சயம் பாராட்டப்படவேண்டியது தான்.
இசையும் செவிகளை வருடுகிறது.
கதையின் தளும்பல்களோடு
நெஞ்சை நெருடுகிறது.
நிவின்பாலியின் நடிப்பு தெரியவில்லை.
அந்த வைக்கம் பஷீர் அவர்களின்
"எழுத்தாளும்"
ஒரு விவரிப்பு நுட்பமாய் இழைகிறது.
இயக்குனர்
பாத்திர உருவங்களை "உருவகங்களாக"
காட்டியிருக்கிறார்.
உதாரணம் அந்த "டெமாகிரசி "சிறுவன்.
பாலசந்தர் "அச்சமில்லை அச்சமில்லையில்"
இப்படித்தான் "சுதந்திரத்தின்"
உருவகமாய்
ஒரு வளர்ச்சி  அடையாத பையன் போன்றவரை
காட்டியிருப்பார்.
"ரிச்சி"பட
இயக்குனரின் காமிராக்கண்ணில்
நிறையவே "உஷ்ணம்" இருக்கிறது.
நிவின்பாலி சினிமாக்கதையை
இலக்கியமாய்
தன் பாத்திரத்தில் பூசிக்கொண்டு
உயிர்ப்பு காட்டுகிறார்.

========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக