ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர் (4)

ஆர்.கே.நகர் (4)
=====================================ருத்ரா


தினகரன்

பட்டுவாடாக்களின்
வியூகத்துக்குள் மாட்டியிருக்கிறார்.
ஆனால் அபிமன்யூ அல்ல.

மதுசூதனன்

ரெட்டை இலையின் பெரியகுடை
கையில்.
குடை கந்தல் ஆகிவிடுமோ?

ஸ்டாலின்

கருத்துக்கணிப்புகளின் கவசம் போதுமா?
மௌனமாய் ஒலிக்கும்
கலைஞரின் உரைகளே காவலுக்கு வரும்.

சீமான்

நோட்டுகள் ஓட்டுகளோடு
உரசும் பொறிகளையும்
பொறி வைத்துப்பிடிக்கும் பேச்சு.

கரு.நாகராசன்.

டெபாசிட்டுக்கு ஆபத்து.
ஆம்.ஜேட்லி அவர்களின்
நிதி மசோதாவால்.

வாக்காளர்கள்

அபூர்வ ஜனநாயகப்பறவைகள்.
கூண்டில் வைத்துக் காப்பாற்றி..அந்த‌
வேதனைகளையும் வேடிக்கை பாருங்கள்.

தேர்தல் ஆணையம்

ஓட்டுப்போடுபவர்களின் நாணயம்
எனும் ஊசிமுனையில் நிற்கும்
எட்டடுக்கு மாளிகை.

ஆளுநர்.

துடைப்பம் ஏந்தியிருப்பதால்
கோமாளியல்ல...ஆட்சி கவிழ்க்கும்
"ஷரத்து"க்களும்  இவரிடம் உண்டு.

=====================================================




2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை ஐயா இரசிக்க வைத்தன...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

தங்கள் ரசிப்புக்கு மிக்க நன்றி
திரு கில்லர்ஜி அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக