வெள்ளி, 22 டிசம்பர், 2017

கடவுள்கள்





கடவுள்கள்
=====================================ருத்ரா

கடவுள் கனமானவர்.
ஆம்
அது ஒரு சிலுவையின் கனம்.
கடவுள் கூர்மையானவர்
ஆம்
உடம்பில் ஆணிகள்
அறையப்பட்டபோது
தெரிந்தது.
கடவுள் ரத்தமானவர்.
ஆம்
அது அங்கே பெருகியபோது
தெரிந்தது.
அப்போது அவர் சொன்னார்.
"கடவுளே
தான் என்ன செய்கிறோம் என்று
இந்த கடவுள்களுக்கே
தெரியாது.
இவர்களை மன்னியும்."
இந்த வசனத்தில்
ஒன்றல்ல
கோடி கோடி கடவுள்கள்
இருக்கிறார்கள்.

=========================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக