ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஜனநாயக "தர்மம்"


வாழ்க ஜனநாயகம்.
============================================ருத்ரா

"மணி"யான தங்கள் வாக்குகள்
"மணி"யாகிப்போன
ஒரு பரிணாமத்தில்
அதை வாங்கி வாங்கி
இதை விற்று விற்று
மக்கள் அளித்திருக்கிறார்கள்.
வாழ்க ஜனநாயகம்.!
பிச்சைக்காரர்களின்
தட்டில் தான்
சில்லறைகள் விழும்.
ஆனால் ஓட்டுக்கு
இறைஞ்சுபவர்களின் 
தட்டிலிருந்து "கட்டு கட்டு"களாய்
பிச்சையெடுக்கும்
இந்த "இன்விசிபிள் ஹேண்ட்ஸ்"
 யாருடையவை?
இந்த கைகள் 51 சதவீதம்
இப்படி பிச்சையெடுத்துவிட்டால்
இதுவும்
விந்தையான ஜனநாயக "தர்மம்"
ஆகி விடும்.
வலுவாக ஆளவேண்டிய
ஜனநாயகம்
"ஐயா தர்மம் போடுங்க சாமி"
என்று ஈனக்குரல் எழுப்பி 
நசுங்கிப்போனதை
இதோ
வர்ண வர்ண தோரணங்களில்
கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
ஆம்
மீண்டும் சொல்வோம்
வாழ்க ஜனநாயகம்.

===============================================

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

இந்த இழிநிலை இன்னும் வலுப்பெறும் ஐயா

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

இழினிலை துடைக்கப்படும் என நம்புவோமாக.

கருத்துரையிடுக