பின்னூட்டம்.
FOR POEM BY VANNADHASAN in READERS TRIBE/06.04.26\
வண்ணதாசன் அவர்களின் கவிதை பற்றிய கவிதை
(முகநூல் ..04.04.26) " ரீடர்ஸ் ட்ரைப்ஸில் "
---------------------------------------------------------------------------------
பெயத்தக்க நஞ்சுண்டு அமையும்
நயத்தக்கவருக்கு
ஒவ்வாமை நோய் இருப்பது
தெரிந்திருந்தால்
அந்த ஹெம்லாக் விஷத்தை
அப்படியே ரா வாக
காக்டெய்ல் இல்லாமல்
சாக்ரடீசுக்கு
கொடுத்திருப்பார்களோ?
வரலாறு என்ன சொல்லுகிறது?
அது
ரா வா? காக்டெயிலா?
பின் நவீனத்துவம்
கவிதை எழுத காத்துக்கொண்டிருக்கிறது.
---------------------------------------------------------------
சொற்கீரன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக