உலுக்கிப்பாருங்கள்?
_________________________________________________
கணிப்பொறி தட்டி
உங்கள் கனவுகளையெல்லாம்
உலுக்கிப்பாருங்கள்?
குலுக்கிப்பாருங்கள்?
என்ன வெல்லாம் விழும்
என்பதையும்
உற்று நோக்குங்கள்.
இது வரை விழுந்த
அந்த குவியல்களில்
என்ன என்ன என்று
கிளறிப்பார்த்தீர்களா?
கொடியும்
அதற்குள் சுருண்டு கிடந்த
வர்ணங்களையும் கவனித்தீர்களா?
மூர்ணம் என்றார்கள்.
விரித்து நோக்கினால்
நான்கு வர்ணம்
மனிதத்தின் சமநீதியை
நரபலி கேட்டு
நாக்கு நீட்டுகிறது.
மூலதனைத்தை
இயக்கி இயற்றும்
மக்கள் சுதந்திரம்
தட்டி நொறுக்கப்பட்டு
அதன் சிதலங்களாக
வேலையின்மையும்
வறுமைக்கோடும்
மேலும் மேலும் உயர்ந்து
மக்கள் அதில்
அமிழ்ந்து போயினர்.
கடவுள் புராணங்களின்
அழுக்கு மூட்டைகளே
அரசியல் சாசனங்கள்
ஆகிப்போயின.
இன்னும் இன்னும்
என்னத்தை
"கிளிக்" பண்ணி
கம்பியூட்டர் கேம்ஸ்
ஆடப்போகிறீர்கள்?
பாருங்கள்..பாருங்கள்..
அதோ அந்த குவியலில்
கை வேறு கால் வேறு
தலை வேறு உடல் வேறாய்
வெட்டுண்டு கிடப்பது
உங்கள் ஜனநாயகமே.
ஆயிரம் வெட்டரிவாளாய்
அருகில் கிடப்பது
சாதிகள் சாதிகள் சாதிகளே.
____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக