வாழ்க்கைத்தத்துவம்
__________________________________
எது புரியவில்லையோ
அது எப்படிபுரியவில்லை என்று
புரியாமலேயே
விளக்கிகொண்டிருப்பது.
தத்துவம் என்றால்
வாழ்ந்து காட்டுவது.
வாழ்கை என்றால்
புரிந்து காட்டுவது.
எதற்கு புரிய வேண்டும்?
என்ன புரியவேண்டும்? என்று நம்மிடம்
கேள்விகளை மட்டுமே எறிந்து விட்டு
விடைகளை எதிர்பார்க்காமல்
இருந்து கொண்டிருக்கும் மவுனத்தை தான்
நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்
கடவுள் என்று.
_________________________________________
"நரிவெரூஉத்தலையான்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக