பொட்டு வைக்கும் முன்னமே
ஒரு பொட்டு வைக்க வேண்டுமே.
மனித சமுதாயமே சம
நீதி காணவேண்டுமே.
ஒற்றைவிரல் போதுமே
பொதுமை நீதி வெல்லுமே.
இந்த எண்ணம் மட்டும் போதுமே
சாதி மதம் சாற்றுகின்ற
சாத்திரங்கள் எல்லாமே
மனிதம் எனும் புனிதம் தனை
மக்கிப்போக வைப்பதோ?
புரிந்து கொள்வீர் மக்களே!
புறப்படுங்கள் வெற்றி பெற
புயலெனவே புறப்படுவீர்.
___________________________________
இபியெஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக