விடியும் என்று
ஆயிரம் ஆயிரம் கவிதைகளை
வானத்தில் உலர்த்திக்
கொண்டு தான் இருக்கிறோம்.
உலர்த்த வேண்டிய அறிவின்
ஒளியில்
ஒளிந்து கிடக்கும்
அறிவை நாம்
இன்னும் எட்டவில்லையே.
தன் நிழல் தான்
மறைக்கிறது
சாதி மதங்களின்
மூடத்தனமாய்.
மனம் விழித்து
கண் விழி.
சிந்தனைச்சுடர் கொளுத்து!
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக