யார் அது?
_____________________________
எனக்கு எல்லாமும்
அவனாய்...
எனக்கு நானே
என் மீது அவனாய்..
என் நிழலா?
என் இருளா?
என் திரளா?
யார் அவன்?
அவன் பஞ்ச்
டைலாக்குகளால்
திரையெல்லாம்
கந்தல் தான்.
தரையெல்லாம்
குப்பை தான்.
கொரானா என்று
சொல்லிக்கொள்ளாமல்
வந்த
கொரானாவா?
செத்து தான்
குழிக்குள் விழ
வேண்டுமா என்ன?
ஒருவனே
இப்படி
ஆயிரக்கணக்காய்
பிம்பங்கள் உரிந்து..
.................
அதோ எலிகள் போல்
எல்லா வயதிலும்
பிள்ளைகள் பிள்ளைகள்..
லட்சக்கணக்காய்
ஆற்றுக்குள்..
மந்திரக்குழல் ஊதுகிறான்.
எழுச்சிகள் எனும்
பெரும் வீழ்ச்சிகளை
பேய் ஆட்டங்களில்
அரிதாரப்புகை
மூட்டங்களில்
பொய்மை
தூவுகின்றான்.
கண் மூடுமுன்
மண் மூடுமுன்
மனம் திறவுங்கள்.
மீண்டு எழுங்கள்.
மணி ஓசைகள்
எங்கும் எங்கும்...
___________________________________
இபியெஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக