சனி, 18 ஏப்ரல், 2026

கூச்சல் மழை.

 

 ப்ரம்மமே!

லட்சம் லட்சமாய்

நாங்கள் சுலோகங்களில்

உன்னைச் சொல்லி விட்டோம்.

நீ என்ன?

என்ன தான் நீ?

நீயே சொல்லிவிடேன்.

சரி.

நாளை முதல்

உனக்கு நான் சொல்லுவேன் 

மந்திரங்கள்.

மறுநாள் 

கூட்டம் இல்லை.

அர்ச்சனை டிக்கட்டுகள்

விற்பனையே இல்லை.

என்ன ஆயிற்று.?

சுற்றியிருந்த மரக்கூட்டங்களிலிருந்து

பறவைகளின்

கூச்சல் மழை.

ஒலியும் ஒலியும் மட்டுமே

ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தன.

வர்ணம் தாண்டிய‌

வர்ணம் அற்ற வர்ணத்தில்

சத்தங்கள்

கோவிலை நிரப்பிக்கொண்டன.

__________________________________________

இபியெஸ்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக