சனி, 28 பிப்ரவரி, 2026

vannadaasan kavithai /01.03.26

 


வண்ணதாசன் அவர்களே!


என்ன இப்படி?

ஒரு தீயை அள்ளிப்பூசி

பசியின் கொடும் தீக்கொழுந்து வைத்து

நகங்களுக்கு

விடியல் நகப்பூச்சு பூசுவது போல்

அந்த அழகிய முதுகு மழலைப்பெண்ணின்

முகம் காட்டி

நெஞ்சத்தை கிள்ளி விட்டீர்கள்.

மாவிலை செம்புத்தளிர்

சொட்டிக்காட்டியிருக்கும்

நெருப்பாற்றங்கரை நோக்கிய‌

உங்கள் ஆற்றுப்படைக்குள்

இந்த கற்பாறைகளை

உடைத்து நொறுக்கும்

ஆயுதப்படையிலும்

தேமா புளிமாக்களும்

க‌ருவிளங்கண்ணி 

கூவிளங்கண்ணிகளூம்

கூவிக்கொண்டு தானிருக்கின்றன.

______________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக