திங்கள், 23 பிப்ரவரி, 2026

ஆத்திக் குடி.

 


நீ என்னவேணாலும் எழுது.

எறும்புகள் வாசிக்குதுன்னு சொல்லு.

தூரத்து சன்னல்கம்பிகள்

தங்கக்குழம்பாய் உருகி வழிந்து

ரோடு போட வ‌ச்சிருக்கிற‌

ஜல்லிப்பரல்களில்

சவ்வூடு பரவுதுன்னு

சட்டையக் கழட்டிப்பாரு.

எழுத்து வார்ப்புக்குள்ளே எல்லாம்

யாரோ இருமுறாங்கன்னு

ஸ்டெத் வச்சுக்கேளு.

முத்த சலங்கைகளைக் கோத்து

வீசுகின்ற‌

நிலாப்பிஞ்சுகள் 

நெரடிக்கிட்டே இருக்குன்னு

தேடு...தேடு..

இந்த தேட்டையை எல்லாம்

காகிதக்கசக்கல்களில்

மை ரத்தம் பாய்ச்சி

நீலவானக்கப்பில்

ஊத்தி ஊத்தி ஆத்தி ஆத்திக்

குடி.

___________________________________

சொற்கீரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக