பொருனைப் புத்தகவிழா
_________________________________________
மனுஷ்ய புத்திரன்கள்
சாமராஜ்கள்
வண்ணதாசன்கள்
பாமணிகள்
என்ன பட்டியலை நீட்டிக்கொண்டு
போகிறீர்கள்
இன்னும் தொப்பில் முகமது மீரான்கள்
......
இவையும் காகிதங்கள் தான்
கரையான்களை விரட்டிவிடும்
அக்கினிக்கண்டங்கள்.
நினைவின் சிந்தனையின்
பிழம்புகளை சோழிகளாக்கி
பல்லாங்குழி விளையாடிக்
காட்டிக்கொண்டிருப்பவர்கள்.
போதும்
அந்த செவ்வாய்க்கோளின்
மண்ணை நோண்டிக்கொண்டிருந்தது..
மனிதா..
இப்படிச் சிந்தனைக்குழிகளில்
விழுந்து விழுந்து
புதுப்புது
பிரபஞ்சங்களின்
சொக்கப்பனைகளாய்
திமிறி எழுந்து வா..
இவர்களைப்போல.
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக