வண்ணதாசனும் ஆவாரம்பூக்களும்
_______________________________________
நேற்றைய புதையலுக்குள்
நெடியக்கிடக்கும்
எலும்புக்கூடுகள்
என்றைக்காவது நமக்கு
வாசிக்கத்தரும்
நம் தொன்மைக்கூடுகளை.
அகழ்வு எந்திரங்களின்
அசுரப்பசிக்குள்
டாலர்கள்
செரித்துக்கிடக்கும் நகரக்கட்டிட
இரும்பு எலும்புகள்
விறைத்து விறைத்து
வானத்தையே முட்டி
நிமிர்ந்ததில்
ஊர்க்குருவிகளும் சிறகு உதடுகளில்
எதையோ இனிமையாய்
சலம்பிக்கொண்டிருக்கின்றன.
கனத்த கெட்டியான
அத்தம் நண்ணிய ஆழ்மவுனம்
கிழிசல்கண்களல்
வெறித்து நோக்குகின்றன.
__________________________________________
சொற்கீரன்.
வண்ணதாசனின் பிரளயங்கள்.
__________________________________
நெல்லா புல்லா..?
சொல்லா சொல்லா..
என
மொத்தப்பிரபஞ்சப்பொதியை
இழுத்து நுழைத்து
திணித்து
இனிமை இழையை
நூற்றுத்திரித்து
எப்போது வேண்டுமானாலும்
பற்றிக்கொண்டு
வெடித்து உதிர்க்கும்
கருமருந்துப்பிரளயம்
என்கிற கவிதைக்கொத்துகள்
அந்த
சொற்பூத்தொடுத்தலில்
தமிழ்க்கன்னிக்குடம் உடையும்.
பிறத்தல் என்னும்
பறத்தலும் துவங்கும்.
__________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக