வெள்ளி, 3 மே, 2019

குடி உயரக் கோன் உயரும்

குடி உயரக் கோன் உயரும்
================================சொற்கிழார்

காய்நெல் அறுத்து களம் வரும் முன்னே
கால் கை ஓய்ந்து சருகுகள் ஆனார்
கழனியர் வாழ்க்கை ஏழ்கடல் உப்பும்
கொள்ளா வியர்வை கரிக்கும் அந்தோ!
வெள்ளம் வந்தது பூதம் ஆயினும் அது
விழுங்கியதை விடவும் பெரியவிழுங்கல்
ஆயிரம் கைகள் முளைத்த பூதம்
அங்கிங்கெனாது நாவுகள் நீட்டும்
மறைவாய் கரும்பணம் தின்றிட ஈட்டும்.
யானை புக்க புலம் போல
யாத்த செலவம் பாழ்பட்ட தம்மா!
திரையின் பின்னே வீழ்ந்ததோர் கூட்டம்.
இருளை ஒளியென சமைத்து உண்ணும்.
கோனும் குடியும் குட ஓலை முறையும்
பொம்மை ஆட்டம் அன்னதோர் காட்சி
பொருந்திடக்கண்டோம் மனம் வெந்தோம்.

============================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக