புதன், 29 மே, 2019

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்
===========================================================ருத்ரா

வாழ்க நீ எம்மான் இந்த‌
வையத்து நாட்டிலெல்லாம்...

மகாத்மாவுக்கு தூவினான்
பாரதி இந்த வரிகளை.

மோடிஜி அவர்களே
உங்களுக்கும் இந்த வரிகளால்
குடமுழுக்கு செய்கிறோம்.
ஏனெனில்
ஜனநாயகத்தின் சிகரத்தில்
நீங்கள்
ஏறி நின்று கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள்
என்ன செய்திருந்தாலும்
என்ன செய்யப்போவதாக இருந்தாலும்
எங்களுக்கு
அவை ஒரு பொருட்டில்லை.
வாக்குப்பெட்டிகளே
தங்கள் கோடி வாக்குகளை
உங்களுக்கு
கொட்டிக்கவிழ்த்து
"அபிஷேகம்" செய்திருக்கிறது.
தென்னாட்டில்
அவை வெறுங்குடங்களை
உங்களுக்கு கொட்டினாலும்
எண்ணிக்கை தானே இங்கு
முக்கியம்.
எண்ணிக்கை கணக்கு வென்றது.
கோப தாப ரசாயனங்கள்
தோற்றது.
எது எப்படியிருப்பினும்
ஒரு அடி நீரோட்டம்
எப்படி இழையோடுகிறது
என்பதை காலம் தீர்ப்பு சொல்லட்டும்.
கடிகாரத்து முட்களை
திருப்பி வைப்பதால்
காலம் பின்னோக்கிப் போவதில்லை.
அந்தக்கடியாரம்
அப்படியே ஓடிக்கொண்டிருக்கட்டும்.
இருப்பினும்
உங்கள் உயிர் நண்பருக்கு
அந்த முணு முணுப்புகள் கூட‌
பிடிக்காதே!
உள்ளே முணுமுணுக்கும் அந்த
எச்சரிக்கையின் குயில்பாட்டுகளில் அவர்
எரிச்சல் அடையலாம்.
அந்த கடிகாரத்தை
அதாவது
இந்த பத்திரிகைகளையெல்லாம்
கசக்கிப்பிழிந்து கூழாக்கி
கஷாயம் வைத்து குடித்துவிடலாம்
என்று சொன்னாலும் சொல்லுவார்.
நீங்கள் உங்கள்
"மன்கிபாத்"தின் மனசாட்சிக்குள்....
அதுவும் கூட உங்களுக்கான‌
இமயமலைக் குகை தான்...
தியானம் எனும் உங்கள் பிலிமை
ஓடவிடுங்கள்.
மானுடம் மட்டுமே ஒளிரக்கூடியது.
மானுடம் மட்டுமே அறிவுச்சுடரில்
ஆயிரம் பிரம்மாக்களை
கர்ப்பம் தரிக்க வல்லது...மத‌
சர்ப்பங்கள் படம் காட்டுவதில்
மனத்திட்பங்கள் ஓய்ந்து போகவிடக்கூடாது.
உங்களுக்கும்
ஆயிரம் தெரியும்.
ஆயுதம் அல்ல தீர்வு தருவது என்று.
நூத்திஅம்பதாவது பிறந்த நாள்
வருகிறதாமே இந்த ஆண்டு...
மானுடத்தின்
அந்த "புறாக்குஞ்சு" புன்னகை பூத்து.
வாழ்த்துக்கள்.
ஆம்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.

================================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக