சனி, 18 மே, 2019

தரிசனம்



தரிசனம் 
====================================================================
ருத்ரா இ பரமசிவன்.



கடவுளுக்கு 
கார்ட்டூன் வரைய 
மனிதன் 
சளைத்ததே இல்லை.
வெள்ளை இதழ்கள் இங்கே குவிந்து கொண்டு 
மௌனத்தை ஒலியெழுப்புகின்றன.
கும்பிடும் கைகளின் ரேகைகள் எல்லாம் 
ரத்தத்தைக்கொண்டு 
இந்த பூமியில் 
ரங்கோலிகள் வரைகின்றன.
எந்தக்கடவுள் 
யாருக்கு சொந்தம் என்று 
துப்பாக்கிகளை உமிழவைத்து 
எச்சில் வடிக்கின்றன.
இவர்களின் புனிதம் 
மரண ஓலங்களால் தான் 
தினம் தினம் 
தீர்மானிக்கப்படுகின்றன.
அமைதி எனும்  ஆழ்கடலில் நங்கூரம் பாய்ச்சுவதாய் 
இறைக்கூச்சல்கள்
தூண்டில் இரைகளாய் விழுகின்றன.
ஒரு தடவையேனும் 
இறையின் வாய் 
அந்த இரையைக்ககவ்வியதே இல்லை.
பள பளப்பான 
நம் பணங்களைக்கொண்டு
உயரமான நாவுகள் எனும் கட்டிடங்களைகட்டி 
நக்கித்தான் பார்க்கிறோம்.
வெறிமிக்க 
நம் பேராசைகள் அந்த ஓசோன் படலத்தை 
கந்தலாக்கியத்தில் 
நம் மகா மரணம் எனும் மகா நிர்வாணமே 
தரிசனம் 
தந்து கொண்டிருக்கிறது.



==========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக