சனி, 11 மே, 2019

அஜித்துக்கு தெளித்த "பன்னீர்"

அஜித்துக்கு தெளித்த "பன்னீர்"
==================================================ருத்ரா

சமீபத்தில்
அஜித் அவர்களின்
பிறந்த நாளுக்கு
வாழ்த்துக்கள் எனும்
பன்னீர் தெளித்தார்
ஒரு முக்கியக்கட்சித்தலைவர்.

இதுவரை
அரசியல் சாயம்
தன் மீது விழாமல் பார்த்துக்கொண்ட‌
அஜித்
தேனி மண்வாசனையோடு
தூக்குதுரையாக‌
விஸ்வாசத்தில்
ஏதோ ஒரு
மெல்லிய கோடு காட்டிவிட்டார் போலும்.
அஜித்தின்
அரசியலின் கதவு வெளிச்சம்
அதன் இண்டு இடுக்கு வழியாய்
ஒரு கீற்று காட்டியிருக்குமோ?
நமக்கான ஒரு "சூப்பர் ஸ்டாரை"
நமக்கான ஒரு போன்ஸாய் மரமாய்
நம் மேஜையில் வைத்துக்கொள்ளலாம்
என்று
காய் நகர்த்தல் எனும்
புதிய யோகப்பயிற்சியை
துவக்கி இருப்பாரோ?
ஏற்கனவே வாரணாசியில் போய்
மோடி அலையை
ஒரு கங்கா ஜலக் குடுவையில்
பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்.
இணை துணை என்ற‌
அடைமொழிகள் எல்லாம் இல்லாமல்
சுயம்புவாய்
கோட்டையின் "அரசனாய்"
தன் மகன் செங்கோல் ஏந்த
"டிப்ஸ்" கிடைக்குமே
என்று
மாண்பு மிகு பன்னீர் அவர்கள்
இப்படி பன்னீர் தெளித்திருப்பாரோ?
நகைசச்சுவைக்காக
எழுதப்படும் வரிகள்
ஒருபுறம் இருக்கட்டும்.

ஏதோ ஒரு ஏலியன் படத்தில்
ஏலியன் முட்டைகள்
பயங்கரமாய் அடைகாக்கப்பட்டு
பயங்கரமாய் குஞ்சு பொறிக்கும்
பயங்கரமான காட்சிகள்
நம்மை திகிலில் உறைய வைக்கும்.
அதுபோல்
நம் ஜனநாயக முட்டைகளான
அந்த கணினிப்பெட்டிகள்
அடைகாக்கப்படுகின்றன.
வெளிப்படப்போவது
சர்வாதிகாரமா?
மக்கள் அதிகமா?
நம் கதாநாயகர் தல அவர்களுக்கு
இதையே ஒற்றை வரிக்கதையாய்
முன் வைக்கிறேன்
"எந்திர வேதாளம் " என்ற தலைப்பில்
அரசியல் மசாலாப்பொடியும் கொஞ்சம்
தூவி நடித்தால்..
அய்யய்ய்யோ ..!
அவர் எங்கோயோ போய்
உயர்ந்து நிற்பார்!
அவருக்கு
நம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உரித்தாகுக!

======================================================













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக