செவ்வாய், 28 மே, 2019

ஊசியிலைக்காடுகள்




ஊசியிலைக்காடுகள் 


அர்த்தம் தேடி...
=============================================ருத்ரா

அது நம்மோடு வருகிறது.
நம் புன்னகையில்
நங்கூரம் பாய்ச்சுகிறது.
நாம் பார்க்கும் சினிமாவுக்கும்
டிக்கட் எடுக்காமல்
நம் கூடவே வந்து
நம் அருகில் உட்காருகிறது.
நகர பேருந்துவில்
உட்கார இடம் கிடைக்காமல்
கம்பியில் முட்டு கொடுத்து
நாம் நிற்கும் போது
அந்த கம்பியாக
நம்மை தாங்கிக்கொள்கிறது.
வியர்வை நாற்றம்
செண்ட் வாசனை
பூ வாசனை
நெருக்கமான "ஜனநாயக" வாசனை
அவ்வப்போது
எச்சில் தெறிக்க ஊதப்படும்
நடத்துநரின் விசில்கள்
எல்லாவற்றிலும்
கதம்பமாய்க்கோர்த்து
பின்னிக்கொண்டு
நம்மோடு ஒட்டிக்கோன்டு
அது வருகிறது.
நம்மிடயே
சவடால் பேச்சுகள்
புலம்பல் குரல்கள்
ஆவேசப்பாய்ச்சல் ஒலிப்புகள்
வண்ண வண்ண அரசியல் கொடிகள்
ஆடி ஆசைக்கும்
உள் குரல்கள்
எல்லாவற்றிலும்
அந்த நீரோட்டத்திலும்
அது கால் நனைக்கிறது.
ஹாய் என்று
மனதுக்கு பிடித்தவளுக்கு
ஒரு ரோஜாப்பூ நீட்டும்போதும்
அதன் மகரந்தப்பொடியின்
சிம்மாசனத்திலும்
"அட்னக்கால்"போட்டுக்கொண்டு
உட்கார்ந்திருக்கிறது.
இவ்வளவு ஏன்
கடைசியில்
கட்டையாய் விறைத்து
நாலு பேர் தூக்கிக்கொண்டு
போகும்போது கூட‌
கொள்ளிச்சட்டியில்
புகைந்து கொண்டு நம்மோடு வருகிறது.
போலீஸ் நாய்
எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து
காடு மேடு கல் புல்
மரம் மட்டை மண்ணாங்கட்டி
எல்லாம் வாசனை பிடிக்கிறது.
ஆனால்
குறுக்கே ஆறு ஓடினால்
விக்கித்து நின்று விடுமாமே அது!
ஆம்..
இதுவும் அப்படித்தான்
விக்கித்து நிற்கிறது.
எதைக்கண்டு?...
தேடும் பொருளுக்கும்
தேடப்படும் பொருளுக்கும்
இடையே
கட்டப்படும் சொற்கூடங்கள்
லட்சம் லட்சமாய்
குவிந்து கிடப்பதில் அது
குழம்புகிறது..
ஆம்.
மன சாட்சி தான் அது.

=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக