புதன், 15 மே, 2019

விஷமத்தனமான விமர்சனங்கள்

விஷமத்தனமான விமர்சனங்கள்
===============================================ருத்ரா

விமர்சனம் என்பது
எழுத்துக்கள் வழியாக‌
மனிதர்களை
அவர்கள் ஏந்தும் ஆளுமைகளை
வர்ணம் பூசுவது தான்.
இந்த எழுத்துப்புருசுகளில்
ஏதோ தராசுத்தட்டுகளைத்
தாங்கிய‌
அந்த நடுநிலைக்கோல்
"கோடாமல்" எழுதுவது போல்
ஒரு தோற்றம் மட்டுமே
தெரியும்.
ஆனால் காய்கறி சந்தையில்
நாம் அன்றாடம் பார்க்கிறோம்.
வியாபாரியின்
கைக்குள் ஒரு தந்திரம்
முளைத்து
அந்த தராசுமுள்
அவன் சொன்னபடித்தான் கேட்கும்.
அப்படியான‌
நடுநிலை தவறிய விமர்சனங்கள் தான்
நடுநிலையின்
பொய்த்தோற்றம் காட்டி
விஷமத்தனமான விமர்சனங்களை
பதிவிடுகின்றன.
இப்போது நேராகவே
இந்த சமுதாயத்தைப்பார்ப்போம்.
இது மூடத்தனமான
சாதி மத அரசியல் தீ மூட்டங்களால்
போர்த்தப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் திராவிட இயக்கம்
மக்களின் சிந்தனையில்
வரலாற்று இயலில்
தமிழ் எனும்
நம் மொழியியலில்
ஒரு மறுமலர்ச்சியை ஊட்டியது.
காலப்போக்கில்
அரசியல் நாற்காலி அங்கு
மையம் கொண்ட போது
அந்த திராவிடசிந்தனைகள்
எரிச்சலூட்டின போல தோன்றின.
ஆனால் திராவிட எழுச்சி
இன்னும் நமக்கு தேவைப்படுகிறது.
இந்த பரிணாமத்தில்
அதிமுக தன் முகத்தையே
மாற்றிக்கொண்டது.
பாஜக எனும் மதவாதக்கட்சியே
அதன் உட்கருவாக ஊடுருவி விட்டது.
திமுக மீதும்
இந்த வகையான குற்றச்சாட்டை
சுமத்தும் கடந்தகாலச்சுவடுகளை
வைத்துக்கொண்டு
சிலர் எழுதுகிறார்கள் .
இந்த திசை திருப்பல்களோடு
அணுகுவது தான்
திரிபு அடைந்த நடுநிலை என்பது.
மேலும் ஊழல் என்பதை வைத்து
கிலுகிலுப்பை காட்டும்
அந்த போலி சிந்தனையாளர்கள்
அந்த விமரிசனங்களை
திமுக மீது எறிவதும்
தமிழ்ப்பகைவர்களின் தந்திரங்கள் தான்.
அதிமுக மீது ஊழல் குற்றம்
சுமத்துவது மட்டும் சரியா
என்கிறார்கள் அவர்கள்.
ஆனால் இவர்களின் ஊழல்களை
வெளிப்படுத்துவதில்
அந்த தமிழ் இன எதிரிகளின்
நச்சு வர்ணத்தை தோலுரிக்கும்
நோக்கமே இருக்கிறது.
திராவிட வரலாற்று இயல் தான்
தமிழர்களின்
இப்போதைய அடர்த்தி மிகுந்த‌
தேவை.
மக்கள் இயக்கங்கள் இந்த புள்ளியில்
குவிவது தான்
நம் வரலாற்றின் திருப்புமைனையை
தீர்மானிக்க வல்லது.
அரசியல் நிகழ்வுகளில்
முரண்பாடுகள் கூட‌
நம் இலட்சியத்தை பாதை போட‌
பயன் படுத்திக்கொள்ளப்படுகின்றன.
முன்பு எதிரியாய் இருந்தவர்களோடு
கை கோர்த்துக்கொள்ளும் காட்சிகள்
அத்தகைய முரண்பாடுகள் தான்.
"எங்கோ இருந்த தமிழ்ப்பகைவர்"
இதோ
நம் தமிழ் இதயங்களை
ஈட்டி கொண்டு தாக்க அருகில்
வந்து விட்டனர்.
அன்று எங்கே போயிற்று இந்த வேகம்?
என்று சினங்கொள்ளும்
ஈழத்தாகங்களே!
வெறும் சினமும் வீரமும்
கொத்து கொத்துகளாய்
பலி கொண்டது
நம் தமிழ் உயிர்களைத்தானே!
அன்று அவர் ராஜினாமா செய்யவில்லையே என்று
இன்று நம் தமிழ் எழுச்சி மீதா
கோடரி தூக்குவது?
ஒரு தேசத்தின்
அசுரத்தனமான இறையாண்மைக்கு முன்
இந்த ராஜினாமாக்கள்
என்பது வெறும் பொம்மை விளையாட்டே.
அந்தக்காலியிடத்துக்குள்ளும்
தமிழ்ப்பகைமையே போய்
நிரப்பிக்கொள்ளும் என்பது
என்பது கூடவா நீங்கள் புரியவில்லை.
போர் என்றால் ஆயிரக்கணக்காய்
சாவத்தான் செய்வார்கள் என்று
கொக்கரித்ததே அந்த பகைக்குரல்!
இப்படி நமக்குள் எதிர் எதிராய்
வாள் நீட்டித்தானே
தமிழ் வீரம் என்பது
மூவேந்தருக்குள் முடங்கிப்போனது.
வரலாறு யுத்தக்களம் மட்டும் அல்ல.
அது ஒரு புத்தகக்களம்
பல பாடங்களை போதித்த களம்.
ரத்தம் கொண்டு ஒலிப்பதை விட‌
அறிவின் சத்தம் கொண்டு
நம் முரசை ஒலிக்க வேண்டும்.

இந்த காலகட்டத்து அரசியலில்
நம் தமிழ்க்குரல் ஓங்க வேண்டும்.

ஸ்டாலின் அணியில் திரளும்
இந்த ஜனநாயக பேரெழுச்சியை
கொச்சைப்படுத்தவும்
மழுங்கடிக்கவும்
வேடதாரிகளும் கபடதாரிகளும்
எழுத்து வேட்டையாடக்கிளம்பியிருக்கின்றனர்
விஷமத்தனமாய்
விமரிச‌னங்கள் என்ற பெயரில்.
இந்த தேர்தல் கூட‌
நம் "தலையாலங்கானத்துச் செரு"தான்.
ஆரியப்படை கடந்தவர்கள்
ஆரியப்படையால் மிதித்து நசுக்கப்பட்டு
கடக்கப்பட விடலாமா?
அன்று இமயத்தில் நம் கொடியை
நாட்டியவர்கள்
இன்று ராமர் கோயிலுக்கு
கல் சுமக்கக்கிளம்பிவிட்டார்களே.
சிந்திப்பீர் தமிழர்களே!

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக