செவ்வாய், 30 ஏப்ரல், 2019

தீவிழிக்காட்டில் கதழ்பரிக் கலிமா




தீவிழிக்காட்டில் கதழ்பரிக் கலிமா
========================================ருத்ரா இ பரமசிவன்.


மராஅத்த அடர்கான் விரிவெண் வீதூஉய்
படுத்த மன்றில் திங்களும் தோய்தர
வெண்கடல் ஆர்த்த வெள்ளிடைப் பறந்தலை
பொருள் வேட்டுனன் சென்றான் ஆங்கு
நெடிய ஊழும் ஊழ்த்தது மன்னே.
ஆறு ஊர்வழி மன்பதை உருட்டும்
அடு நனி வாழ்வின் முறைப்படுஊம்
நோன்பின் ஊடிழை நெட்டிழையாவும்
தேர்ந்தவன் அவனே பொருள்வயின்தேடி
பொல்லாக்கானம் பொறிகிளர் வேங்கை
உறுத்து விழித்தது மருட்டியும் அஞ்சா
தீவிழிக் காட்டில் கதழ்பரிக் கலிமா
விரைய ஓட்டிச்செல்லும் காலையும்
எந்தன் மைவிழி மீமிசை ஆரிடை
ஏகிட செய்யும் அவல் பரல் கடாஅத்து
அஃதே எந்தன் செவ்வரி மழைக்கண்
நம் அணிலாடு மூன்றில்  வெரூஉ செய்திட
மீட்டு இவண் சேர்க்கும் நம்
வெள்ளிய மன்று  வள்ளியில்  படர்ந்த
அகன் மனை ஈண்டு அறிவாய் தோழி.

======================================================
இது நான் எழுதிய ஒரு சங்கநாட்டைச் செய்யுள் கவிதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக