செவ்வாய், 21 மே, 2019

படத்தை மாற்று


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், கார் மற்றும் வெளிப்புறம்

படத்தை மாற்று
=========================================ருத்ரா

படத்தை மாற்று படத்தை மாற்று
என்று
பட்சி சொல்லிக்கொண்டே இருந்தது.
கைக்கு கிடைத்த படத்தை
"கிளிக்கி"விட்டேன்.
இப்போது கிளி என்ன சொல்கிறது என்றால்
தமிழன் அன்று
அகநானூறு புறநானூறு
சொல்லிக்கொண்டிருந்தான்.
அதெல்லாம்
இப்போது "பட நானூறு"ஆகி விட்டது.
இரட்டைக்காமிராவோடு தான்
குழந்தை அந்த இருட்டறையிலிருந்து
வெளி வருகிறது.





(முக நூல் படத்தை மாற்றி விட்டேன்.)



படத்தை மாற்று
=========================================ருத்ரா

படத்தை மாற்று படத்தை மாற்று
என்று
பட்சி சொல்லிக்கொண்டே இருந்தது.
கைக்கு கிடைத்த படத்தை
"கிளிக்கி"விட்டேன்.
இப்போது கிளி என்ன சொல்கிறது என்றால்
தமிழன் அன்று
அகநானூறு புறநானூறு
சொல்லிக்கொண்டிருந்தான்.
அதெல்லாம்
இப்போது "பட நானூறு"ஆகி விட்டது.
இரட்டைக்காமிராவோடு தான்
குழந்தை அந்த இருட்டறையிலிருந்து
வெளி வருகிறது.
"எதிரே பார்ப்பது
தன்னைப் பார்ப்பது"
என்ற இலட்சியம் தவிர
வேறு ஒன்றும் இல்லை.
அன்று இந்திரனுக்கு ஆயிரம்கண்
முளைத்தது போல‌
இன்று இந்த "அண்ட்ராய்டு" மனிதனுக்கும்
கண்கள் கண்கள் கண்கள்..
ஒவ்வொரு மயிர்க்காலும் மின்னல் சிலிர்க்கும்
கண்கள் தான்.
மனிதன் என்பது சிறந்து நிலைத்து
இருப்பதைக்குறிப்பதே
நம் தமிழின் வேர்ச்சொல்லான‌
"மன்"என்னும் "பகுதி".
ஆனால் மன் என்பது மனு என்னும்
சமஸ்கிருதச்சொல்லாய் மருவியதை
தமிழன் தலைகீழாகப்பார்த்து
அதை அவர்கள் சொல்லென்று
அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறான்.
அவன்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்று
அன்றைக்கே
"மன் கி பாத்" ஒலிபரப்பி விட்டான்.
ஆனால் இன்றோ
ஏதோ ஒரு "சிந்து பாத்தாய்"
அன்னியமாய் நிற்கின்றான்.
அவன் முதல் ஒலி அந்த‌
"சிந்து ஆற்றங்கரையில்"தொடங்கி
உலகத்துக்கே கொடுத்த வெளிச்சத்தை மறந்து
மத இருளில் கிடக்கும்
மந்தையாகிப்போனான்.
இந்த எலிப்பொறியிலிந்து விடுபட‌
இன்னும்
கணிப்பொறி பட்டன்கள்
எத்தனை காலத்துக்கு
தட்டிக்கொண்டிருக்கப்போகிறானோ?
தமிழா
என்று
உன்னை  ஒலித்துப்பயனில்லை.
அதோ பார்
விலையில்லா "செல்ஃபோன்"
உனக்கு கொடுக்கப்படலாம்.
உன்னைப்படமெடுத்துப்பார்த்துக்கொள்.
உன் தமிழ் முகம் அதில்
காணாமல் மறைந்தே போயிருக்கும்.

================================================

    படத்தை மாற்று
    =========================================ருத்ரா

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக